டெல்லி: கொரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தும் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை தமிழகம் வரவுள்ளார். இந்தியாவில் ஜனவரி 13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக தடுப்பூசியை பெறும் மாநிலங்களில் தமிழகமும் இடம்பிடிக்கும் என கூறப்படுகிறது. ஆந்திரா, குஜராத், பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஒத்திகை நடத்தப்பட்டது. நாளை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை நடைபெறுகிறது. தடுப்பூசி கிடைத்தவுடன் அதனை மக்களுக்கு செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழகத்தில் தயார் நிலையில் உள்ளன. இதனை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை தமிழகம் வரவுள்ளார்.