புதுடெல்லி: ‘ஒப்பந்த விவசாய தொழிலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனவே செல்போன் டவர் சேதப்படுத்திய விவகாரத்தில் பஞ்சாப் அரசு தலையிட வேண்டும்’ என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த சட்டத்தின் ஒப்பந்த விவசாயம் மூலம் விளைநிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து விடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். குறிப்பாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிக பலன் பெறும் எனபஞ்சாப் விவசாயிகள் எண்ணுகின்றனர். இதன் காரணமாக, பஞ்சாப், அரியானாவில் பல இடங்களில் ஜியோ செல்போன் டவர்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன. பஞ்சாப்பில் 9000 ஜியோ டவர்களில் 1500 டவர்கள் நொறுக்கப்பட்டுள்ளன.