அனைத்து மாவட்டங்களிலும் பாஜ சார்பில் பொங்கல் நிகழ்ச்சி: திரையுலக பிரமுகர்கள் பங்கேற்பு

சென்னை: பாஜ சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரையுலக பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஜ சார்பில் அனைத்து மாவட்டங்களிலும்”நம்ம ஊரு பொங்கல்” நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகின்ற 9, 10ம் தேதிகளில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும். நான் ராமநாதபுரத்தில் 9ம் தேதி காலை 10 மணிக்கு நம்ம ஊருப் பொங்கல் நிகழ்ச்சியினை தொடங்கி வைக்க உள்ளேன். 10ம் தேதி மேட்டுப்பாளையம் நிகழ்ச்சியில் பாஜ தேசிய  பொது செயலாளர் சி.டி.ரவி கலந்து கொள்கிறார்.

குஷ்பு சுந்தர், ராதாரவி, கங்கை அமரன், கவுதமி, நமீதா, இயக்குனர் வாசு, காயத்ரி ரகுராம் உள்பட பல்வேறு திரையுலக பிரமுகர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற இருக்கின்றன. ஆண்கள், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் இடம் பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: