மெல்போர்ன்: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மெல்போர்னில் ஒரு உணவகத்துக்கு சென்ற ரோகித், கில், பன்ட், பிரித்வி, சைனி ஆகியோர் விதிமுறைகளை மீறி உள்ளரங்குக்கு சென்று சாப்பிட்டதுடன் ரசிகர் ஒருவருடன் கை குலுக்கி செல்பி எடுத்துக்கொண்டதாகவும், வீரர்களுக்கான உணவுக் கட்டணத்தை அந்த ரசிகரே செலுத்தியதாகவும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து ரோகித் உட்பட 5 வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டதுடன் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஜன. 7ம் தேதி தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று தனி விமானத்தில் சிட்னி புறப்பட்டனர்.