திருப்புவனம்: திருப்புவனம் அருகே முள் படுக்கையில் படுத்தபடி பெண் சாமியார் அருள் வாக்கு கூறினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் மற்றும் மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை பெண் சாமியார் நாகராணி, மாரிமுத்து சுவாமிகள் நிர்வகித்து வருகிறன்றனர். இக்கோயிலில் பெண் சாமியார் நாகராணி ஆண்டுதோறும் 48 நாட்கள் விரதமிருந்து, மார்கழி 18ம் தேதி முள் படுக்கையில் படுத்து தவமிருந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறுவது வழக்கம். இதன்படி நாகராணி காப்புக்கட்டி விரதத்தை துவக்கினார். 48ம் நாளான நேற்று கோயில் வாசலில் 6 அடி உயரம், 10 அடி அகலத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டது.