ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் இறந்து கரை ஒதுங்கிய டால்பினை வனத்துறையினர் மீட்டு பரிசோதனை செய்தனர். மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் வாழும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் பல்வேறு காரணங்களால் இறந்து கரை ஒதுங்குகிறது. ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியிலும், ராமேஸ்வரம் தீவு கடற்கரையோரங்களிலும் கடல் ஆமை, டால்பின், கடல்பன்றி, கடல்பசு உள்ளிட்டவைகள், திமிங்கலம் உட்பட பெரிய மீன்கள் காயங்களுடன் உயிரிழந்து, மயக்க நிலையில் நீந்திச்செல்ல முடியாமல் அடிக்கடி கரையில் ஒதுங்கிறது.