நடிகை கங்கனா பங்களாவில் விதிமீறல்: நீதிமன்றம் கருத்து

மும்பை: நடிகை கங்கனாவின் பங்களாவில் விதிமீறல் நடந்துள்ளதாக மும்பை நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்திரா பகுதியில் உள்ள நடிகை கங்கனாவுக்கு சொந்தமான பங்களாவின் ஒரு பகுதியை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக இடித்து தள்ளியது. இதற்கிடையே கார் பகுதியில் 16 மாடி குடியிருப்பில் அவருக்கு 5வது மாடியில் 3 வீடுகள் உள்ளன. இந்த 3 வீடுகளையும் ஒரே வீடாக மாற்றும் பணியை மேற்கொண்டார். இதில் அவர், சட்டவிரோதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த 2018-ம் ஆண்டு மும்ைப மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி நடிகை கங்கனா மும்பை சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதி எல்.எஸ்.சவான் விசாரணை நடத்தினார். கடந்த வாரம் அவர் மனுவை தள்ளுபடி செய்தார். அதில், ‘நடிகை கங்கனா தனது 3 வீடுகளையும் ஒன்றாக இணைப்பதற்காக கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறி உள்ளார்’ என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் மனுதாரர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய 6 வாரம் காலஅவகாசம் வழங்கி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: