ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த படகு இல்லம், சூட்டிங்மட்டம், தொட்டபெட்டா சிகரம், கோடநாடு காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களும் கடந்த 7ம் தேதி முதல் திறக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பல மாதங்களுக்கு பிறகு படகு இல்லம் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஊட்டியில் ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.