போல்பூர், :பணத்தை வீசியெறிந்து சிலர் அழுகிய எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது போல் திரிணாமூல் காங்கிரசையே விலைக்கு வாங்கி விட முடியாது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கட்சி மாறிய எம்.எல்.ஏக்களை விமர்சித்தார்.சட்டப் பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போல்பூரில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் ேபரணி நடந்தது. அப்போது மம்தா பானர்ஜி பேசுகையில், ‘வெளியில் இருந்து வந்தவர்கள் (பாஜக) வெறுப்பு அரசியலையும், போலியான அரசியலையும் கொண்டு வந்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் முதுகெலும்பைச் சிதைக்க முயல்கிறார்கள். ஆனால், ரவிந்திரநாத் தாகூர் மண்ணில் அதுபோன்று ஏதும் நடக்காது.