ஷிவமொக்கா: பொங்கல் பண்டிகைக்கு பின்னர் முதல்வர் எடியூரப்பா பதவி இழப்பது உறுதி என்று முன்னாள் எம்எல்ஏ பேலூர் கோபாலகிருஷ்ணா தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ``சிகந்தூர் சவுடேஷ்வரி தேவியின் கோயில் விவகாரத்தில் அரசின் கையாடல் காரணமாக எடியூரப்பாவுக்கு அம்மனின் சாபம் கிடைக்கும் என்று கூறியிருந்தேன். சவுடேஷ்வரி அம்மனின் சாபம் காரணமாக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான டி நோடிபிகேஷன் வழக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இப்போது, அவருக்கு நெருக்கமானவர்களே முதல்வர் பதவியைஇழக்கும் நேரம் நெருங்கி வருகிறது என கூறிவருகின்றனர்.