புதுடெல்லி,டிச.29: தோடாபூர் கிராமத்தில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் பாதையை 90 நாட்களுக்குள் சீரமைத்து தரப்படும் என்று டெல்லி குடிநீர் வாரியத்தின் துணை தலைவர் ராகவ் சதா அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தார்.
டெல்லியின் ராஜீந்தர் நகர் தொகுதி எம்எல்ஏவான ராகவ் சதா, குடிநீர் வாரியத்தின் துணை தலைவராகவும் இருந்து வருகிறார். வாரந்தோறும் தமது தொகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். தற்போது அவரது தொகுதிக்குட்பட்ட தோடாப்பூர் கிராமத்திற்கு சென்றார். அங்கு வசிப்பவர்களிடம் சேதமடைந்த கழிவுநீர் பாதை காரணமாக அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.