திருமலை: ஆந்திர மாநிலம் தற்காலிக தலைநகர் அமராவதி அடுத்த வெலகம்புடியில் வரவேற்பு நுழைவு வாயிலில் பெயர் பலகை வைப்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் பலியானர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநில தற்காலிக தலைநகரான அமராவதியில் மாநில தலைமை செயலகம் வெலகம்புடியில் அமைந்துள்ளது. அங்குள்ள சாலையில் நுழைவு வாயிலில் வைத்துள்ள வரவேற்பு பலகையில் யார் பெயர் பொறிப்பது என்பதில் கடந்த சில நாட்களாக அப்பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் நேற்று முன்தினம் இரவு மோதலாக வெடித்தது.