பாணாவரம்: பாணாவரம் அருகே மழை வெள்ளத்தால் அழுகிய நெற்பயிரில் கிடைக்கும் நெல்மணிகளை சேகரிக்க சேற்றில் இறங்கி விவசாயிகள் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே பொன்னப்பன்தாங்கள் கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு சொந்தமாக சோளிங்கர்- காவேரிப்பாக்கம் சாலையில், 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நெற்பயிர் நடவு செய்திருந்தார்.நெல்மணிகள் அறுவடைக்கு தயாரான நிலையில், நிவர் மற்றும் புரெவி புயல்களால் பெய்த கனமழையால் பயிர்கள் மூழ்கியது. மேலும் மழை வெள்ளம் வடியாத காரணத்தினால் நெற்பயிர்கள் அழுகியது. எனவே கிடைப்பதை எடுத்துக் கொள்ள ஆட்களை வைத்து ஆங்காங்கே கால்வாய்கள் வெட்டி மழைநீரை வெளியேற்றினார். ஆனாலும் தண்ணீர் முழுமையாக வெளியேற்ற முடியாததால், நெல்மணிகளை சேகரிக்க முடியவில்லை.