திருச்சி மாவட்டம் அல்லூரில் திருட முயன்ற கேரள இளைஞர் உயிரிழப்பு!

திருச்சி: திருச்சி மாவட்டம் அல்லூரில் திருட முயன்ற கேரள இளைஞர் உயிரிழந்தார். தப்பிச் செல்ல முயன்ற போது விழுந்த இளைஞரை பிடித்த பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். திருட முயன்றவர்கள் கேரளாவை சேர்ந்த அரவிந்த், திபு என போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: