ஐதராபாத் : ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சினிமா படப்பிடிப்பிற்காக ஹைதராபாதில் கடந்த 10 நாட்ளாக நடிகர் ரஜினிகாந்த் தங்கி இருந்தார். சில தினங்களுக்கு முன்னதாக படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சில நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ரஜினிகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்பதும் தெரியவந்தது. இருப்பினும் நடிகர் ரஜினிகாந்த் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர்.