மதுரை: பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 54 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை 8ல் வெளியானது. அதில், பல்கலைக் கழகங்களில் ஒட்டு மொத்தமாக இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, இடஒதுக்கீடு விதிகளை முறையாக பின்பற்றி புதிதாக அறிவிப்பு வெளியிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இதேபோல் கோ பிநாத், காந்தி ஆகியோரும் மனு செய்திருந்தனர்.