லண்டன் : பிரிட்டனில் அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸை காட்டிலும் வீரியம் மிக்க மேலும் ஒரு கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரிட்டன் சென்ற 2 பேருக்கு நடத்திய பரிசோதனையில், கொரோனா வைரஸின் மாறுபட்ட புதிய வடிவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பிரிட்டனில் ஏற்கனவே பரவி உள்ள கொரோனா வைரஸை காட்டிலும் அதிக வீரியம் கொண்டது. இது 70%-த்திற்கும் அதிகமான வேகத்தில் பரவக்கூடியது என்பதால் மிகுந்த கவலை அளிப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேத் ஹன்காக் கூறியுள்ளார்.