டெல்லி: திரைப்பட பிரிவு, திரைப்பட திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்பட காப்பகம், இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டில் ஆண்டிற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால் உலகளவில் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நாடாக இந்தியா திகழ்கிறது. சினிமாத்துறை, தனியர்த்துறையினால் வழிநடத்தப்பட்டு வரும் நிலையில், திரைப்பட பிரிவு, திரைப்பட திருவிழா இயக்குனரகம், இந்தியாவின் தேசிய திரைப்பட காப்பகம், இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் இணைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.