ஒசூர்: ஓசூர் அருகே சானமாவு, அஞ்சலகிரி வனப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட யானைகள் மூன்று குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்aளதால் கிராம மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். ஓசூர் அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று காலை அஞ்சலகிரி கிராம பகுதியையொட்டிய வனத்தில் சுற்றித்திரிந்துள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில், வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை பட்டாசு வெடித்து விரட்டினர். இதனால், அந்த யானைகள் இரு குழுக்களாக பிரிந்து கிராமத்திற்கு அருகே உள்ள ஓடை பகுதியில் தஞ்சமடைந்தன. இந்த காட்டு யானைகளை 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.