வாஷிங்டன்: அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும் பல தனியார் நிறுவனங்களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடைபெற்று வந்ததை அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர். இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களும் சந்தேகம் தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியாவும், அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என கூறினார். இந்நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு முரணான கருத்தை தெரிவித்துள்ளார்.