செங்கம் அருகே மினி கிளினிக் திறப்பு விழா அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்: ஒருவரையொருவர் தாக்கியதால் பரபரப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணக்குருக்கை கிராமத்தில் நேற்று முன்தினம் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

விழாவையொட்டி, கிராமத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அரங்கில் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து, மினி கிளினிக்கை திறந்து வைத்து பேச அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் விழா மேடைக்கு வந்தார்.

அப்போது, அமைச்சருக்கு சால்வை அணிவிப்பதிலும், விழா மேடையில் அமர்வதிலும் அமைச்சர் ஆதரவாளர், மாவட்ட செயலாளர் ஆதரவாளர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தகராறு செய்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதேபோல், செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில் நடந்த மினி கிளினிக் திறப்பு விழாவிலும் பேனர் வைப்பது தொடர்பாக அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது.

Related Stories: