செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணக்குருக்கை கிராமத்தில் நேற்று முன்தினம் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
விழாவையொட்டி, கிராமத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அரங்கில் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து, மினி கிளினிக்கை திறந்து வைத்து பேச அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் விழா மேடைக்கு வந்தார்.