டெல்லி: வடகிழக்குப் பகுதியின் அபரிமிதமான சுற்றுலாத் திறனைப் பயன்படுத்த வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். மிசோரம் ஆளுநர் திரு. ஸ்ரீதரன் பிள்ளை எழுதிய, ‘ஓ மிசோரம்’ என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்புப் புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று காணொலிக் காட்சி மூலம் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அபரிமிதமான சுற்றுலாத் திறனை மக்கள் முழுவதும் பயன்படுத்த வேண்டும். இந்தப் பகுதியில் விமானப் போக்குவரத்து அதிகரிக்க வேண்டும். அப்போது தான் வடகிழக்கு மாநிலங்கள் அதிகளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்றார்.