டெல்லி : நான்காவது ராணுவ இலக்கிய விழாவில் டெல்லியில் இருந்து காணொலி மூலம் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று உரையாற்றினார்.நாட்டின் ராணுவ வரலாற்றை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய அவர், ராணுவ இலக்கியத் திருவிழா போன்ற புதுமையான முயற்சிகளை வரவேற்றார்.இத்தகைய நிகழ்வுகளின் மூலம் பொது மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நமது பாதுகாப்புப் படைகள் புரிந்த போர்கள் குறித்தும், வீரர்களின் அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டு நாட்டுப்பற்றுடன் திகழ்வார்கள் என்றார்.