சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் மகபூப் பாஷா (29). இவரது மனைவி ஆயிஷா (19). சில நாட்களாக மகபூப் பாஷா வேலைக்கு செல்லாமல் பித்து பிடித்ததுபோல் வீட்டில் இருந்துள்ளார். இதை பார்த்த மனைவி ஆயிஷா, முதலில் தர்காவுக்கு கொண்டு சென்று இரண்டு நாள் அவரை தங்க வைத்தார். அப்படியும், மகபூப் ஷாவுக்கு சரி ஆகவில்லை. எனவே, ஆயிஷா தனது கணவரை கடந்த ஜூன் 9ம் தேதி செங்குன்றம் அடுத்த லட்சுமிபுரம் கோதண்ட பெருமாள் கோயில் தெருவில் குறிமேடை நடத்தி வரும் சாமியார் சங்கர் (49) என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சாமியார் சங்கர், மகபூப் பாஷாவிற்கு பேய் பிடித்துள்ளதாகவும், இதை விரட்ட வேண்டும் எனில், இங்கு 10 நாட்கள் தங்கி பூஜை செய்யவேண்டும் எனக் கூறி உள்ளார்.