தங்கவயல்: தங்கவயலில் அரசு அலுவலகங்கள் இயங்க மினி விதானசவுதா கட்டுவதற்கான வருவாய் துறை அதிகாரிகள் நில ஆய்வு பணியை அம்பேத்கார் நகரில் தொடங்கினர். தங்கவயலில் மினி விதானசவுதா கட்டிடம் கட்டுவதற்கு அரசு 10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மினி விதானசவுதா கட்டுவதற்கு தகுந்த நிலத்தை தேர்வு செய்ய எம்.எல்.ஏ.ரூபகலா சசிதரன் தலைமையில் அரசு அதிகாரிகள் தங்கவயலில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் இறுதியாக ராபர்ட்சன்பேட்டை அம்பேத்கர் நகரில் நீதி மன்றத்தின் அருகே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் மினி விதானசவுதா கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படாமல் இருந்தது. தங்கவயல் தாலுகா அரசு அலுவலகங்கள் செயல்பட மினி விதானசவுதா கட்ட அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியும் கட்டுமான பணிக்கான நிர்வாக ரீதியிலான அனுமதியும் அரசு வழங்கிய நிலையில், கட்டுமான பணி தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தொகுதி எம்எல்ஏ ரூபகலா சசிதர் மாவட்ட பொது பணித்துறை முதன்மை பொறியாளர் சந்திர சேகரை சந்தித்தார்.