கோவை: கோவை தியாகி குமரன் வீதி அருகே பவிழம் வீதியை சேர்ந்தவர் நந்தகோபால் (43). தங்க நகை பட்டறை உரிமையாளர். இவருக்கும் கேரளாவை சேர்ந்த முன்னாள் தூதரக ஊழியர் சொப்னா சுரேசிற்கும் தங்கம் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இவர் மூலமாக தங்க கட்டிகள் ஆபரணமாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2010ல் நந்தகோபால் மும்பை போலீசில் ஹவாலா பணம், நகை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு இவர் கோவையில் சிறிய அளவில் பட்டறை நடத்தி பின்னர், தங்க கட்டி, ஆபரண ெதாழிலில் உச்சத்தை எட்டியிருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தபோது சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.