மங்களூரு: கிராம பஞ்சாயத்து தேர்தலில் வாக்காளர்கள் பா.ஜ.வுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்று முன்னாள் அமைச்சர் யு.டி.காதர் தெரிவித்தார். மங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது: பா.ஜ. அரசு அதிகாரத்துக்கு வந்த பின் மக்களுக்கு ரேசன் அட்டை கிடைக்கவில்லை. வீடுகள் வழங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. ஆயுஷ்மான் பாரத் கார்டு யாருக்கும் கிடைக்கவில்லை. உதவி தொகை பணம் கிடைக்காமல் உள்ளது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வந்து அவர்களை தெருவில் நிற்கவைத்துள்ளனர். இது போன்ற ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் கற்று கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.வுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.