கோவையில் 23-வது தேசிய அளவிலான கார் பந்தயம்: ஆடவர் பிரிவில் அஸ்வின் தத்தாவுக்கு சாம்பியன் பட்டம்

கோவை: கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கோவையில் 23-வது தேசிய அளவிலான கார் பந்தய போட்டி நடைபெற்றது. கோவை அடுத்த செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற ஆடவர் பிரிவில் சென்னையை சேர்ந்த அஸ்வின் தத்தா சாம்பியன் பட்டம் வென்றார். ஜேகே டயர் எப்.எம்.எஸ்.சி.ஐ. தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் கோட்டையத்தை சேர்ந்த அமீர் வெற்றி பெற்றார்.

மகளிர் பிரிவில் மீரா எர்டா சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டார். கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி  பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் கார் பந்தய போட்டிகள் நடைபெற்றது.

Related Stories: