விழுப்புரம்: விழுப்புரத்தில் கந்துவட்டி கொடுமையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ளது புதுப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் மோகன் என்பவர் ஆசாரி வேலை செய்து வந்துள்ளார். இவர் ஒருவரிடம் வேலை சம்பந்தமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் வருமானம் இழந்து தவித்த மோகன், கடனை திருப்பி தர முடியாமல் இருந்துள்ளார். இருப்பினும் கடன் அளித்தவர்கள் உடனடியாக திருப்பி தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மோகன், அவரது மனைவி விக்னேஷ்வரி மற்றும் நித்திஷ், சிவபாலன், ராஜஸ்ரீ ஆகிய 3 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். ஆசாரி மோகன், வெகுநேரம் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் சன்னல் வழியே பார்த்தபோது குடும்பமே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.