செல்போன் கடையில் கொள்ளை

செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (42). இவர் செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு  நேதாஜி சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். சுதாகர் கடைக்கு அருகில்  முரளி என்பவர் டீக் கடை நடத்தி வருபவர். நேற்று காலை தனது கடையை திறக்கும்போது செல்போன் கடை திறந்து இருப்பதை பார்த்து சுதாகருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கடையில் வைத்திருந்த 32 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு பழைய செல்போன்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.

Related Stories: