பாலியல் தொழில் புரோக்கர் தலைமறைவு

அண்ணாநகர்:  அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக அண்ணா நகர் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை ஆணையர் ஜவகர் தலைமையில் ஆய்வாளர் சரவணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஐதராபாத்தை சேர்ந்த பெண்ணை மீட்டனர். விசாரணையில் ஷாம் சுரேஷ் என்பவர்  நிறைய பணம் சம்பாதிக்கலாம் என கூறி பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.தலைமறைவான ஷாம் சுரேஷை தேடுகின்றனர்.

Related Stories: