அந்தியூர்: அந்தியூர் அருகே முதுமக்கள் பயன்படுத்திய தாழி, எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் ஊராட்சிக்குட்பட்ட மொசுகவுண்டனூர் காலனியில், சிறு பாலம் கட்டுவதற்காக பணிகள் நடந்தது. நேற்று பெக்லைன் இயந்திரத்துடன் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் 5 அடி ஆழத்திற்கு குழி தோண்டினர். அந்த குழியில் ஏதோ பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த பொருட்களை எடுத்து பார்த்தபோது, அவை முதுமக்களின் தாழி, எலும்பு துண்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தாழிகள் மற்றும் எலும்பு துண்டுகள் உடைந்த நிலையில் இருந்தது.