காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் இளைய மகள் சரண்யா (24). மாற்றுத் திறனாளியான இவர் காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் பகுதியில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். அலுவலகத்தில் கழிவறை இல்லாத நிலையில் மாற்றுத்திறனாளியான இவர் அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் முறையாக கட்டி முடிக்கப்படாத கழிவறையில் மூலையில் அமைக்கப்பட்ட பத்தடி ஆழம் உள்ள செப்டிக் டேங்கில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் தவறி விழுந்துள்ளார்.