லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிரதமரின் வாரணாசி மக்களவை தொகுதியில் நடந்த சட்ட மேலவை தேர்தலில் 2 தொகுதிகளில் பாஜ தோல்வியை தழுவியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் காலியாக இருந்த 11 சட்ட மேலவை தொகுதிகளுக்கான எம்எல்சி தேர்தல் கடந்த செவ்வாயன்று நடைபெற்றது. 5 தொகுதிகள் பட்டதாரிகளுக்கும், 6 தொகுதிகள் ஆசிரியர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. பாஜ.வுடன் இணைந்து செயல்படும் ஆசிரியர்கள் சங்கம், சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என 199 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.