சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விவசாயிகள் போராட்டம் திட்டமிட்டு அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகளால் நடத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு குறுகிய கால நன்மையை கூறி அவர்களின் வருங்கால தொடர் வளர்ச்சியை, வருமானத்தை எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரச்சாரத்தின் மூலம், தவறான செய்திகளைப் பரப்பி விவசாயிகளை திசை திருப்ப நினைக்கக் கூடாது. அப்பாவி விவசாயிகள் இதற்கு பழியாகக்கூடும். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் பயன் தருவதோடு விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலுக்கும் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய வகையில் அமையும்.