புதுடெல்லி: விபத்தில் பெண் மீது காரை மோதி நிற்காமல் தப்பித்துச் சென்ற பல் டாக்டரை 2 வாரத்துக்குப் பின் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.தெற்கு டெல்லி லடோ சராயில் நவம்பர் 17ம் தேதி இரவு 38 வயது பெண் சாலையை குறுக்கே கடந்தார். அப்போது தறிகெட்ட வேகத்தில் வந்த கார் அந்த பெண் மீது மோதியது. பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பெண் சரிந்ததைக் கண்டும், காணாதது போல நிற்காமலே கார் விரைந்து சென்று மாயமானது.தகவல் கிடைத்து சம்பவ பகுதிக்கு வந்த போலீசார், பெண்ணை எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துள்ளார் என எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, தறிகெட்ட வேகத்தில் தாறுமாறாக வாகனம் ஓட்டியது, விபத்து ஏற்படுத்து பலி உண்டாக்கியது போன்ற ஐபிசி குற்றப்பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரிக்கத் தொடங்கினர்.