புதுடெல்லி: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியை சேர்ந்த மாணவர்களும் கைகோர்த்துள்ளனர். அதேசமயத்தில், இந்த மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைளை குறிப்பட்டு அவற்றை சுவரொட்டிகளாக டெல்லி எல்லை பகுதிகளில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுபற்றி டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்டப்படிப்பு மாணவர் ரவீந்தர் சிங் (22) கூறுகையில், “ நாட்டை பல்வேறு பிரச்சினைகள் பாதித்து வருகிறது. அதுகுறித்து மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார்கள். குறிப்பாக, விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து நாங்கள் கவைலயடைந்தள்ளோம்.