மைசூரு: மாநில முதல்வராக எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார். எந்த தவறும் செய்யாத அவரை நீக்குவது சரியில்லை என்பது என்னுடைய கருத்து என்று அமைச்சர் ஆர். அசோக் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில முதல்வராக தற்போது எடியூரப்பா இருந்து வருகிறார். கட்சி மேலிட தலைவர்கள் அவர் முதல்வராக இருக்க வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இதனால் மீதமுள்ள இரண்டரை ஆண்டும் அவரே முதல்வர் பதவியில் நீடிப்பார். எந்த தவறும் செய்யாத அவரை நீக்குவது சரியில்லை என்பது என்னுடைய கருத்து. முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தை காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் அரசியலாக்கி வருகிறார். இடைத்தேர்தல் தோல்விக்கு பின் சிவகுமார் நிதானத்தை இழந்துள்ளார்.