விஜய்சங்கரால் பாண்டியா அளவுக்கு பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாது: கவுதம்கம்பீர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டி:  ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி சம நிலையில்லாமல் தடுமாறுகிறது. இந்த தடுமாற்றம் இப்போது ஏற்பட்டதல்ல, கடந்த உலகக்கோப்பைப் போட்டியிலிருந்து இந்த தடுமாற்றம் தொடர்கிறது. ஹர்திக் பாண்டியா பந்துவீசும் அளவுக்கு உடற்தகுதியில்லாமல் இருந்தால், 6வது பந்துவீச்சாளரை எங்கிருந்து கொண்டு வருவீர்கள். விஜய் சங்கர் மட்டுமே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வரிசையில் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆனால், 5வது அல்லது 6வது வரிசையில் களமிறங்கி பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை விஜய் சங்கரால் ஏற்படுத்திவிட முடியுமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

இதே போல் அவரால் 7-8 ஓவர்கள் நேர்த்தியாக வீச முடியுமா? என்பதும் சந்தேகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுபோல் ரோகித் சர்மா அணிக்கு திரும்பினாலும் கூட இது போன்ற சிக்கலை சரி செய்ய முடியாது. டாப் வரிசை பேட்ஸ்மேன்களில் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசுவதற்கு யாரும் இல்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் இந்த பிரச்சினை இல்லை. ஆல்-ரவுண்டர்கள் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல் கைகொடுக்கிறார்கள் என்றும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Related Stories: