மதுரை : மதுரை வைகை ஆற்றில் திடீரென ஆளுயரத்திற்கு நுரை பொங்கி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் நேற்றிரவு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் வைகை ஆற்றில் மழைநீர் வரத்து சற்று அதிகரித்தது. நேற்றிரவு முதல் மழைநீர் வைகையில் ஓடி கொண்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. யானைக்கல் பகுதியிலுள்ள தடுப்பணையில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படாமல் நீரில் நுரை பொங்கி நிற்கிறது