பொன்னேரி: ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரிய மனோபுரம், பெரும்பேடு குப்பம், ஏ.ரெட்டி பாளையம் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டனர்.தொடர்ந்து, பிச்சாட்டூர் அணையில் இருந்து 7600 கன அடி வினாடிக்கு ஆற்றில் உபரிநீர் வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமத்தில் தண்ணீர் புகாமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.