புதுச்சேரி: புதுச்சேரியில் நிவர் புயலையொட்டி விடிய, விடிய காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒரே நாளில் 30.35 செ.மீ மழை பெய்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு இது, அதிகபட்ச மழை அளவு என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி அடுத்த மரக்காணம் அருகே நிவர் புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. இதையொட்டி, புதுச்சேரியில் கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்தது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. புயல் கரையை கடந்ததையொட்டி இரவில் தொடங்கி விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 30.35 ெச.மீ மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 2015ல் இதே அளவு மழை இருந்தது. தற்போது 5 ஆண்டுகளுக்குப்பிறகு அதிகபட்ச மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.