ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஜெய்பூர்: ராஜஸ்தானில் மேலும் 3,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,56,947-ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,237-ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,27,408- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 27,302- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: