திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தை சேர்ந்த அகூர் பஞ்சாயத்து மக்கள் திருத்தணி முருகன் கோயிலில் உற்சவர் முருகப்பெருமானை சுமந்து செல்லும் சுமை தாரர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்று வருடத்திற்கு ஒரு முறை இந்த பஞ்சாயத்து பகுதியில் உற்சவர் முருகப்பெருமானை எடுத்து வந்து இந்த பஞ்சாயத்தில் உள்ள ரெட்டி குளம் மண்டபத்தில் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். இந்த கிராமத்தில் இந்த நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். இது பல ஆண்டு காலமாக இருந்து வந்துள்ள ஒரு பழக்கம். மேலும் பழமையான இந்த மண்டபத்தில் வருடத்திற்கு ஒரு முறை தான் நிகழ்ச்சி என்பதால் யாரும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. அந்த பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு சிலர் நடமாட்டம் இருப்பதை கண்ட அந்த பஞ்சாயத்து மக்கள் அந்த பகுதிக்கு நள்ளிரவு விரைந்து சென்றுள்ளனர்.