டெல்லி: மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்றதில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.