விரைவு தபால் மூலம் சபரிமலை கோயில் பிரசாதம்

சென்னை: தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய தபால் துறை திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்துடன் சபரிமலை சுவாமி பிரசாதத்தை இந்தியா முழுவதும் உள்ள பக்தர்களுக்கு முன்பதிவு செய்வதற்கும் மற்றும் விரைவுத் தபால் மூலம் வீட்டு வாசலில் வழங்குவதற்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு பாக்கெட் சுவாமி பிரசாதத்தில் அரவணப் பாயாசம், நெய், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் ஆகியவை உள்ளது. ஒரு பிரசாத பை விலை ரூ.450. இந்த பொருட்கள் அட்டைப்பெட்டியில் பேக் செய்யப்பட்டு விரைவுத்தபால் மூலம் பக்தர்களுக்கு அனுப்பப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: