அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

கவுகாத்தி: அசாம் மாநில முன்னாள் முதல்வர்  தருண் கோகாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 86.காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் தருண் கோகாய். கொரோனா நோய் தொற்று காரணமாக தருண் கோகாய், இரண்டு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.  பின்னர் கடந்த அக்டோபர் 25ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு பின்னரான உடல்நலக்கோளாறுகள் காரணமாக கடந்த 2ம் தேதி அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவர் நீண்டகாலமாக சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5.34 மணிக்கு தருண் கோகாய் சிகிச்சை  பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துனை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள்,  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: