கவுகாத்தி: அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 86.காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் தருண் கோகாய். கொரோனா நோய் தொற்று காரணமாக தருண் கோகாய், இரண்டு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த அக்டோபர் 25ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு பின்னரான உடல்நலக்கோளாறுகள் காரணமாக கடந்த 2ம் தேதி அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.