சிவகங்கை: சிவகங்கை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இணை இயக்குநராக இளங்கோ மகேஸ்வரன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று மாலை 4 மணிக்கு திடீரென சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த அலுவலகத்திற்கு வந்தனர். உடனே அலுவலர்கள் பணத்தை வெளியில் வீசி எறிந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் அலுவலகத்தின் வெளியில் உள்ள கழிவுநீர் தொட்டி, அலுவலகத்தை சுற்றியுள்ள இடம், இணை இயக்குநரின் ஜீப் உள்ளிட்டவற்றில் சோதனை செய்தனர். ஆனால் பணம் எதுவும் சிக்கவில்லை.