சிட்னி: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி அளித்துள்ள பேட்டி: ஐபிஎல் போட்டியில் செயல்பட்ட விதம் எனக்கு மிகுந்த நம்பி–்க்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. என்னை சரியான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். என் தோள்மீதிருந்த சுமை குறைந்தது போன்று உணர்கிறேன். ஆஸ்திரேலியத் தொடருக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் நான் தயாராகுவேன். இப்போது நான் மிகவும் தன்னம்பிக்கையுள்ளவராக உணர்கிறேன். டெஸ்ட்டில் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன். சரியான லைன் லென்த்தில் பந்துவீசிவிட்டால் எந்தவிதமான போட்டியிலும் நாம் சிறப்பாகச் செயல்பட முடியும்.