திருப்பதி: திருப்பதிக்கு ஜனாதிபதி வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார். இதற்காக வருகிற 24ம் தேதி தனி விமானம் மூலம் திருப்பதி ரேணிகுண்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
அதன் பின்னர், காரில் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.